கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பொறியில் தொழிநுட்ப பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்முறைப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள நிலையங்களில் இடம்பெறும். இப்பரீட்சை பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தமது அனுமதி அட்டையை பின்வரும் இணைப்பில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
