சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 11 முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து மேலதிக வகுப்புக்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் யாவும் மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் பகிர்வது என்பன தடைசெய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த முறை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
