அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தில் பரீட்சை முறைகளில் உடனடி மாற்றங்கள் அமுல்படுத்தப்படமாட்டாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தரம் 1 க்கு 2026 ஆம் ஆண்டு உள்நுழையும் மாணவர்களிடமிருந்து இந்த புதிய மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
