வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. (27.02.2025). எதிர்வரும் 26 ஆம் திகதி சிவராத்திரி என்பதனால் மாணவர்களுக்கு 27 ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் பாடசாலை 01/03/2025 சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.
