வேலை நிறுத்திற்குத் தயாராகும் ஆசிரியர் கல்வியியலாளர்கள்
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் வேலை நிறுத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமது சேவே தொடர்பாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பதவுி உயர்வுடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டதாகும், இருவாரங்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக கல்வி அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் வாக்களித்த போதிலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என இலங்கை கல்வியியலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இப்பிரச்சினைகள் தொடர்பாக கலந்துதரையாடுவதற்கு ஒரு வாரத்திற்குள் சந்தர்ப்பம் தராவிட்டால் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக இலங்கை கல்வியிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
