தரம் 8 வரை போட்டிப் பரீட்சைகள் அற்ற கல்வி – கல்வி அமைச்சர்

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபல பாடசாலைகள் மற்றும் பிரபலமற்ற பாடசாலைகள் என பிரிப்பதேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, பாடசாலைகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும் என்றும், அதற்காக அரசு கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலம் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள் அல்லது எழுதக் கற்றுக்கொடுக்கும் நேரம் அல்ல என்றும், தேர்வுக்குத் தயாராகும் நேரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் கல்வி முறையில் எட்டாம் வகுப்பு வரை போட்டிப் பரீட்சைகளை நடத்தும் நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *